செய்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்படவுள்ளது

கோயிலில் 2019 ஏப்.,14ல் விகாரி ஆண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. அப்போது, 'விகாரி வருஷத்தின் பலனாக, இந்தாண்டு மழை அதிகம் இருக்காது. இதில் பத்து மடங்கு கடலிலும், ஆறு மடங்கு மலைகளிலும், நான்கு மடங்கு நிலத்திலும் மழை பெய்யும். விவசாயம் நடுத்தரமாக இருக்கும். நோய் நொடிகளால் பயம் அதிகம் உண்டாகும். சம்பாதிக்க வழியின்றி இருப்பதை விற்று உண்ண வேண்டி வரும்,' என கணிக்கப்பட்டது.

விகாரி பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்ட பலன்கள் நிறைவேறி வருவதாக ஜோதிட வல்லுனர்கள் கணித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக கொரோனா நோயால் உலகம் உறைந்துள்ளது. சித்திரை பிறப்பான இன்று சார்வரி ஆண்டு பஞ்சாங்கம் இக்கோயிலில் காலை 8:30 மணிக்கு வாசிக்கப்படுகிறது. இதன் ஆண்டு பலன் சிறப்பாக அமைய வேண்டும், என அம்மன், சுவாமிக்கு தங்க கீரிடம், தங்கப்பாவாடை சாத்துப்படி செய்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்படவுள்ளது. ஊரடங்கு உத்தரவால் பக்தர்களுக்கு அனுமதியில்லை.